Archives: செப்டம்பர் 2020

வாக்கு மாறாதவர்

லீனாவுக்கு அவர் அளித்த வக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட ஜான், தனது திருமண உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறும்போது தடுமாறினார். அவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இந்த வாக்குறுதிகளை எப்படி கொடுக்கமுடியும் என்று நினைத்தார். விழாவின் மூலம் அதைச் செய்தார் ஆனால் அவருடைய கடமைகள் கனத்திருந்தது. வரவேற்புக்கு பிறகு, ஜான் தன் மனைவியை தேவாலயத்திற்கு அழைத்துச்சென்று - இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக – லீனாவை நேசிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்யவேண்டும் என்று ஜெபித்தார்.

ஜானின் திருமணநாளின் அச்சங்கள் அவரது மனித பலவீனங்களை அங்கீகரிப்பதின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், தேசங்களை ஆபிரகாமின் சந்ததியின் (கலா. 3:16) மூலம் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்த தேவனுக்கு அத்தகைய வரம்புகள் இல்லை. 

யூத கிறிஸ்தவர்கள் விடாமுயற்சசியோடும், பொறுமையோடும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தைத் தொடர வேண்டுமென்றும் கூறி,  ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியையும் (எபி. 6:13-15), அவர்  பொறுமையாய் காத்திருந்து வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். ஆபிரகாம் மற்றும் சாராள் மூத்த குடிமக்கள் என்ற நிலையில் இருந்தாலும்   தேவன் வாக்குபண்ணின “பெருகவே பெருகப்பண்ணுவேன்” (வ14) என்பதை நிறைவேற்ற ஒரு தடையாய் இருந்ததில்லை.

நீங்கள் சோர்ந்துபோய், பலவீனமான மனிதனாய் இருக்கும்போது தேவன் மேல் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறீர்களா? உங்கள் கடமைகளை கடைபிடிக்க, உறுதிமொழிகளையும் சபதங்களையும் நிறைவேற்ற போராடிக்கொண்டிருக்கிறீர்களா? 2 கொரிந்தியர் 12:9ல் “என் கிருபை உனக்கு போதும். பலவீனத்தில் என் பலம்  பூரணமாய் விளங்கும்” என்று தேவன் நமக்கு உதவி செய்ய வாக்களித்திருக்கிறார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக ஜான் லீனா தம்பதியருக்கு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்திருக்கிறார். உங்களுக்கும் உதவி செய்வார் என்று ஏன் நம்பக்கூடாது?

அன்பின் பூட்டு

பாரிஸில் உள்ள பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தின் கற்பனைக்குறிய ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் காதலர்களின் ஆயிரக்கணக்கான பெயரின் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த கொண்டிப்பூட்டுகளைக்  கண்டு ஆச்சரியத்துடன் நின்றேன். சீன் ஆற்றின் நடப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பாலம் முழுவதும், ஒரு ஜோடியின் “என்றென்றைக்கும்” என்ற உறுதிமொழியினால் காதலர்களின் அடையாளமான இந்தப் பூட்டுகளால் மூழ்கியிருந்தது. 2014ம் ஆண்டு இந்தப் பூட்டுகள் அதிர்ச்சியூட்டும் 50 டன் எடை கொண்டு, பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், இந்தப் பூட்டுக்களை அகற்றவேண்டியிருந்தது.

அன்பு பாதுகாப்பானது என்ற உறுதி வேண்டி மனிதன் எவ்வளவாய் ஏங்குகிறான் என்பதை இந்த ஏராளமான காதல் பூட்டுகள் சுட்டிக்காட்டுகிறது. உன்னதப்பாட்டு, பழைய ஏற்பாட்டில் ஒரு புத்தகம், இரண்டு காதலர்களுக்கிடையே ஒரு உரையாடலைச் சித்தரிக்கிறது. அந்தப் பெண் பாதுகாப்பான அன்பிற்காக ஏங்குவதை “நீர் உம்மடைய இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்” (உன்ன. 8:6) என்று கேட்கிறாள்.

உன்னதப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற நீடித்த காதல் அன்புக்கான ஏக்கம், புதிய ஏற்பாட்டில் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம் (1:3) என்ற சத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. மனித அன்பு சிக்கலானதாயிருக்கும் மற்றும் காதல் பூட்டுகளை பாலத்திலிருந்து அகற்றிவிட முடியும் ஆனால் நம்மில் வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவி தேவனின் முடிவில்லாத அன்பையும் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைக்காக அவர் வைத்திருக்கிற நிரந்திர உறுதியான அன்பையும் நிரூபிக்கிறது.

ஒருபோதும் அதிக பாவமில்லை

“நான் வேதாகமத்தை தொட்டால், என்னுடைய கரத்தில் அது தீப்பிடித்துக்கொள்ளும்” என்று என்னுடைய கல்லூரி பேராசிரியர் கூறினார். என்னுடைய இதயம் கனத்தது. அந்தக் காலை வேளையில் நாங்கள் படித்த ஒரு நாவலில் வேதத்திலுள்ள ஒரு வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் வாசிக்கும்படியாக நான் என் வேதத்தை எடுத்தப்போது அவர் கவனித்து இப்படியாக கருத்து தெரிவித்தார். என்னுடைய பேராசிரியர் தான் மன்னிக்கப்படுவதற்கு முடியாத ஒரு மகா பெரிய பாவியாயிருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும் தேவனின் அன்பையும் - நாம் எப்போதும் தேவனின் மன்னிப்பிற்காக அவரை நாடமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது என்றும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியமில்லை.

நெகேமியாவில் மனந்திரும்புதலைப்பற்றியும் மன்னிப்பைப்பற்றியும் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் நாடு கடத்தப்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்கள் எருசலேமிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு குடியேறியப் போது, வேதப்பாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாணத்தை வாசித்தார். (நெ. 7:73-8:3). அவர்கள் பாவிகளாயிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவில்லை என்று நினைவுகூர்ந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (9:17,19). அவர்கள் கூப்பிட்டப்போது அவர் கேட்டு, அவருடைய மிகுந்த இரக்கத்தின்படி அவர்களோடு பொறுமையாயிருந்தார் (வச. 27-31).

இதேப்போன்று, தேவன் நம்மிடத்திலும் பொறுமையாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பினால் அவர் நம்மை கைவிடமாட்டார். என்னுடைய பேராசிரியரிடம் சென்று அவருடைய பழைய வாழ்க்கை எப்படியிருந்தாலும் இயேசு அவரை நேசிக்கிறார் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறார் என்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களைக் குறித்தும் என்னைக் குறித்தும் இயேசு அப்படியே கருதுகிறார். நாம் அவரிடம் மன்னிப்பிற்காக நெருங்கினால் அவர் நம்மை மன்னிப்பார்.

இயேசு அவர்களை மன்னிக்க முடியாத பாவியாய் இருக்கிறதாக உணருகிற யாராவது  உங்களுக்குத் தெரியுமா? இயேசு நீதிமான்களுக்காக அல்ல பாவிகளுக்காகவே வந்தார் என்ற சத்தியம் (மாற். 2:17) இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்களிடம் எப்படிப் பேசுகிறது?

தேவன் நினைவுகளை வகுத்தார்

என்னுடைய வளர்ந்த மகன் ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்த போது, என் தந்தையின் வேலையில்லா ஆண்டில் தேவனின் தொடர்ந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பையும் குறித்து ஞாபகப்படுத்தினேன். என்னுடைய தாயார் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி தோற்றுப்போனபோது, தேவன் எங்கள் குடும்பத்தை பெலப்படுத்தின சூழ்நிலையை நினைவுகூர்ந்தேன். வேதத்தில் தேவனுடைய கிருபையை விவரிக்கும் சூழ்நிலைகளை எடுத்துரைத்து, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வதில் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தினேன். தேவன் வகுத்த குடும்ப நடைபாதையில் என்னுடைய மகனை அழைத்துச்சென்றேன். எங்ளுடைய குடும்பத்தின் பள்ளத்தாக்குகள் மற்றும் மலையுச்சி போன்ற சூழ்நிலைகளில் தேவன் எப்படி சார்திருக்கக்கூடியவராய் இருந்தார் என்பதை அவனுக்கு  நினைப்பூட்டினேன். நாங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், கொண்டாடிக்கொண்டிருந்தாலும், தேவனுடைய பிரசன்னம், அன்பு மற்றும் கிருபை எங்களுக்கு போதுமானதாயிருந்தது.

இருப்பினும், இந்த விசுவாசத்தை பெலப்படுத்தும் யுக்தி என்னுடைது என்று நான் கோரினாலும், எதிர்கால சந்ததியினர் தேவனை விசுவாசிக்க தூண்டுவதற்கு நாம் நிகழ்சிகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் வடிவமைத்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் தேவன் செய்த எல்லாவற்றையும் கண்டதை நினைவுகூர்ந்த போது, அவர் நம்பிக்கையின் உருளைக்கற்களை அவர்களுடைய தெய்வீகமாக வகுத்த நடைபாதையில் வைத்தார்.

இஸ்ரவேலர்கள், தேவனைப் பின்பற்றும்போது அவர் தம்முடைய வாக்குதத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்கு சாட்சியாயிருந்தனர். (உபா. 4:3-6). அவர், அவர்களுடைய ஜெபத்தை எப்போதும் கேட்டும் பதிலளித்தும் இருக்கிறார். (வச. 7). இளைய தலைமுறையினருடன், மகிழ்ச்சியுடன் கடந்த கால அனுபவங்களை இஸ்ரவேலர்கள் நினைவிற்கு கொண்டு வந்து (வச. 9), ஒரே சத்திய தேவனுடைய பரிசுத்தமுள்ள மற்றும் பாதுகாக்கப்பட்ட வார்த்தைகளை பகிர்ந்துக்கொண்டனர் (வச. 10).

நம்முடைய மகாப் பெரிய தேவனுடைய மகத்துவம், இரக்கம், மற்றும் நெருக்கமான அன்பைப் பற்றி நாம் கூறும்போது அவருடைய  உறுதியான நீடித்த நம்பகத்தன்மை நம்முடைய திடநம்பிக்கையும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்துகிறது.

ஒரு ஆபத்தான மாற்றுப்பாதை

ஹேமா நினைத்தாள் “என்ன ஒரு வீணான நேரம்”. அவளுடைய காப்பீட்டு முகவர் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மற்றொரு சலிப்பான விற்பனைக் காரியம் என்று ஹேமாவுக்குத் தெரியும், அனால், அவளுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேச ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தாள்.

முகவரின் புருவங்கள் பச்சை குத்தப்பட்டிருக்கிறதை கவனித்த அவள், தயக்கத்துடன் ஏன் என்று கேட்டாள். அந்தப் பெண் இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பி இப்படி செய்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டாள். ஹேமாவின் கேள்வி, எப்போதும் வழக்கமாக பேசும் நிதியைப் பற்றிய பேச்சிலிருந்து ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையியிருந்தாலும், அதிர்ஷ்டம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி உரையாடவும், தான் ஏன் இயேசுவை சார்ந்து வாழ்கிறார் என்பதைப் பற்றி பேசவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்ந வீணான நேரம் ஒரு தெய்வீக நியமனமாய் மாறியது.

இயேசுவும் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் சென்றார். யூதேயதவிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணப்படும்போது, ஒரு யூதன் நினைத்துப் பார்க்க முடியாத காரியமான, ஒரு சமாரியப்பெண், மற்ற சமாரியர்களும் அவளை தவிர்த்த ஒரு விபச்சார பெண்ணிடம் பேசுவதற்தான மாற்றுப்பாதையை தெரிந்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய உரையாடல் அனேகரை இரட்சிப்புக்குள்ளாக  நடத்தும்படியாக முடிந்தது (யோவா. 4:1-26, 39-42.).

நீங்கள் பார்கக்கூட விரும்பாத ஒருவரை சந்திக்கிறீர்களா? நீங்கள் சாதாரணமாக தவிர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் மோதிக்கொண்டிருக்கிறீர்களா? “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்”  எப்போதும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் நாமக்கு நினைவுபடுத்துகிறது (2 தீமோ. 4:2). ஒரு ஆபத்தான மாற்றுப்பாதையைக் கருத்தில் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும். தேவன், அவரைக்குறித்துப் பேச ஒரு தெய்வீக வாய்ப்பை இன்றைக்குக் கொடுக்கலாம்!